நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் மர்மம்- பின்னணியில் யார்?

0

 

நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தேடு மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கை என்று சில தரப்புக்கள் கூறுகின்றன.

யாழில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டுச் சம்பவங்களில் சம்பந்தப்பட்வர்கள் மீது நீதிபதி இளஞ்செழியன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருவதால், ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக அது இருக்கலாம் என்றும் ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

யாழ்பாணத்தில் இடம்பெற்றுவருகின்ற போதைப் பொருள் பாவனைகள், மற்றும் கலாச்சாரச் சீர்கேடுகளுக்கு எதிராக நீதிபதி வழங்கிவருகின்ற கடுமையான தீர்புக்களின் காரணமாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற பார்வையையும் சில ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.

எதிர்காலத்தில் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் போன்ற ஒரு அரசியல் தலைவராக, தமிழர் நலனில் அக்கறை கொண்ட துணிச்சல்காரரான இளஞ்செழியன் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைத் தாக்குதலாகக்கூட, இந்தத் தாக்குதல் இருக்கலாம் என்று வாதடும் தரப்புக்களும் இருக்கின்றன.

ஆனால், இவை அனைத்தையும் கடந்து ஒரு மிக முக்கிய இராணுவ நலன் இந்தத் தாக்குதலின் பின்னால் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அதுபற்றிய பார்வைதான் இந்த வீடியோ…

பகிரல்

கருத்தை பதியுங்கள்