புலிகள் கருணா பிளவு- நடந்தது என்ன?( உண்மைகள் -24) – நிராஜ் டேவிட்

0

கருணா என்ற துருப்புச் சீட்டை தமது இரண்டாவது ஆட்டத்திற்குப் பயன்படுத்த, ஸ்ரீலங்காப் படைத்துறைத் தலைமை தீர்மாணித்தது.
மட்டக்களப்பில் கருணா குழு என்ற பெயரில் அச்சத்தை உலாவவிட்டு, அதன்மூலம் குழப்பத்தை அறுவடைசெய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டு, அந்தச் சதியை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு – ஸ்ரீலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புலிகள் மீதான தாக்குதல், புலிகளின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல், தமிழ் தேசியத்தை வலியுறுத்துபவர்களைக் குறிவைத்துத் தாக்குதல், ஊடகவியலாளாகள் மீதான தாக்குதல், வடபகுதியைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல் – என்று கருணா குழுவின் பெயரில், காரியங்கள் கனகச்சிதமாக நிறைவேற்றப்பட்டன.

பகிரல்

கருத்தை பதியுங்கள்